Sunday 28 February 2016

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வந்தது எப்படி?


1909ஆம் ஆண்டு மார்ச் மாதம்...

சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் (செனட்) சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவி ன் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன் மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் (Intermediate Course) தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய தில்லை என்பதும்தான் அத்தீர்மானம் மாறாக, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், அத்தீர்மானத்தின் பிற்பகுதி.

அவையில் சில எதிர்ப்புகள் எழு கின்றன. ஆதரித்துப் பேச எழுகின்றார் ஜி.நாகோஜிராவ். இந்நாட்டின் இலக் கியம், தத்துவம், சமயம் அனைத்தும் சமற்கிருத மொழியோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, வட்டார மொழிகளை விட்டு விட்டு, சமற்கிருத மொழிக்கே ஊக்கம் தரப்பட வேண்டும்’’ என்கிறார் ராவ்.

சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக அன்று இருந்த மார்க்ஹன்டர், இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன் நிதானம் தேவை என்கிறார். டி. ராமகிருஷ்ண பிள்ளை செத்த மொழி யான வட மொழிக்கு ஏன் ஊக்கம் தர வேண்டும்? தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கட்டாயம் பாடமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

இறுதியில் தீர்மானம் வாக்கெடுப் பிற்கு வீடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படு கின்றது.

நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியபின்தான். நிலைமை மாறு கின்றது. அக்கட்சியின் சார்பில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இராம ராயநிங்கர், வைஸ்ராயிடம் ஒரு மனு அளிக்கின்றார். சமற்கிருதத்தோடு பல் வேறு சமூக, சமய முரண்களைக் கொண்டிருப்பதால், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் திராவிட மொழிகளே முதன்மை யானவை, வடமொழி அன்று’’ எனக் குறிப்பிட்டு, மீண்டும் தமிழ்ப்பாடம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1924 பிப்ரவரியில், சென்னை, பச்சையப் பன் கல்லூரியில், தமிழ்க் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்அன்றைய அமைச்சர், டி.என். சிவஞானம் பிள்ளை தமிழ்ப் பாடத்தின் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றார்.

இறுதியில், 1926ஆம் ஆண்டு இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு வரப்படுகின்றது.

(சான்று: The Madras Mani, The Hindu  முதலான ஆங்கில நாளேடுகள் வெளி யிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், கே. நம்பி ஆரூரன் எழுதியுள்ள Tamil Renaissance and Dravidan Nationalisam  மற்றும் முனைவர் அ. இராமசாமி எழுதியுள்ள அண்ணாவின் மொழிக் கொள்கை’’ ஆகிய நூல்கள்)
நன்றி: விடுதலை28/02/2016

No comments:

Post a Comment