Friday 29 April 2016

கள்ளுக்கடை திறப்பது சீமானின் மதுஒழிப்பு!

மது போதைப்பொருள் ஓழிப்பு!
இது நாம் தமிழர்  கட்சி தேர்தல் துண்டறிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது.


கள்ளுக்கடையை திறப்போம்! மதுவை ஒழிப்போம்!
இது நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன ஒரே குழப்பமாக இருக்கா...
எனக்கும்
அதே குழப்பம் தான்!

சரி சீமான் மதுவை ஒழிப்பாரா? மாட்டாரா?


அவர் வெளியிட்ட வரைவு அறிக்கையை பார்ப்போம்..

பக்கம் 59-ல்
பனங்களையும், தென்னங்களையும் பெயர் மாற்றி பனம்பால், தென்னம்பால் என்ற பெயரில்
தமிழ்த் தேசிய மதுபானமாக அறிவிக்கிறார்.
ஒவ்வொரு ஊரிலும் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.

பக்கம் 180 & 183-ல்
மதுவையும், புகையிலைப் பொருட்களையும் முற்றாகத் தடை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சரி இறுதியாக என்ன சொல்கிறார் சீமான்?

வெளிநாட்டு மதுபானங்களை தடை செய்வோம்.
உள்நாட்டு மதுபானத்தை விற்பனை செய்வோம்

அதாவது டாஸ்மார்க்கிற்கு பதில்
கள்ளுக்கடையை திறப்போம்.

ஆனால் இப்படி நேரடியாக கள்ளுக்கடையை திறப்போம் என்று கூறினால்.
பெண்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்.

அதனால் “கள்என்று சொல்வதற்கு பதிலாக பனம்பால், தென்னம்பால் என்ற பெயரில் கடைகளையை திறப்போம் என்று கூறுகிறார்.

இதுதான் சீமான் கூறும் “மாற்று அரசியல் அதாவது

“கள்” என்ற சொல்லை மட்டும் மாற்ற மாட்டோம்!
கள்ளுக்கடையை திறந்து செயலும் படுத்துவோம்!

எச்சரிக்கை தமிழர்களே! 

மாற்று அரசியல் என்பது நேர்மையான அரசியலாக இருக்க வேண்டும்.

மதுவையும் ஒழிப்போம்கள்ளுக்கடையையும் திறப்போம்! என்று கூறி
மக்களை ஏமாற்றும் அரசியலாக இருக்கக் கூடாது.
-தஅ-


Monday 25 April 2016

இவர்களை வைத்து அரசியல் செய்யும் சீமான் - எப்படி?



நடப்பது .தி.மு. ஆட்சி.

ஏன் .தி.மு. ஆட்சி இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யவில்லை ? என்று சீமானின் நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டி எழுதவில்லை?


நடிகர் சஞ்சை தத்-யை  பா.. (BJP)  ஆட்சிதான் விடுதலை செய்தார்கள் என்று குறிப்பிடவில்லையே ஏன்? 

பா.. மீது தனி பாசம்  ஏன்?


பா.. (BJP)  ஆட்சிதான் எழுவரையும் விடுவிக்க தடை போட்டுள்ளார்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை? 

பா..-வின் பெயரை மறைப்பதன் மர்மம் என்ன?


.தி.மு. அரசு; மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து எழுவரையும் ஏன் விடுதலை செய்யவில்லை என்று குறிப்பிடவில்லை? 

அதனை எதிர்த்து, ஜெ.அரசை கண்டித்து சீமான் ஏன் போராடவில்லை?

நாம் தமிழர் கட்சி சட்டப்போரட்டத்தை நடத்தவில்லையே ஏன்?

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் சட்டப்போரட்டத்தை நடத்துவார்கள் என்றால் அது ஏமாற்றும் செயல்?

எழுவரையும் விடுவிக்க மறுத்த பா..-வையும் மோடி அரசையும் எதிர்த்து கண்டித்து ஒரு அறிக்கைக்கூட சீமான் வெளியிடவில்லையே ஏன்?

இப்போது நடக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க அரசை குற்றம்சாட்டாமல் அதற்கு முந்தைய தி.மு.க அரசை மட்டும் திட்டமிட்டு குற்றம் சாட்டுவது ஏன்?

சீமானும், நாம் தமிழர் கட்சியும் இப்பிரச்சினையில் உள்நோக்கத்துடன் செயல்படுவதை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. இவர்கள் ஈழ தமிழர்களுக்காகவோ, தமிழக தமிழர்களுக்காகவோ சீமான் போராடவில்லை. மாறாக இப்பிரச்சினைகளை பயன்படுத்தி தி.மு.க-வை அழிக்க வேண்டும். மக்கள் மனதில் தி.மு.க எதிர்ப்பினை உருவாக்க வேண்டும்.

ஏன் தி.மு.க-வை அழிக்க வேண்டும்?

தி.மு.க-வை அழித்தால் மட்டும் தான் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் சாதிக் கட்சிகள் தமிழ் நாட்டில் நன்றாக வேர்பிடித்து வளர முடியும்.

அதனால் தான் சீமான் திராவிடர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று வரலாற்றை திரித்து பொய் கூறுகிறார்.

தமிழன் மட்டும்  நாட்டை ஆள வேண்டும் என்று கூறி மற்ற எந்த குடிமகனும் நாட்டை ஆள உரிமை கிடையாது என்று சொல்லி இனவெறியை வளர்க்கிறார். 

இவைதான் பிரித்தாலும் சூழ்ச்சி என்பதாகும் அதை பயன்படுத்தினால் மட்டும் தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தமிழ் நாட்டில் வளர முடியும்.

அதற்குதான் சீமான் துணை நிற்கிறார். சில நேரங்களில்  பொதுவாக சில வார்த்தைகள் பா.ஜ.க வை திட்டுவார். அது வெறும் கண் துடைப்பு. அதற்கு உதாராணம்தான்  இந்த எழுவர் விடுதலை பிரச்சினையில் அ.தி.மு.க பா.ஜ.கவை எதிர்த்து போராடாமல் மவுனமாக இருப்பது.

இப்படி ஏமாற்றும் சீமானின் போலி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழர்களின் உண்மை உணர்வுகளை அழிக்க புதிதாக தோன்றியுள்ள நோய் கிருமிதான் சீமான்

தமிழகத்தில் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க உரக்க பேசுபவர்தான் சீமான்; எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு கொடிய நோய் கிருமி.

எச்சரிக்கை தமிழர்களே!

சீமான் போன்ற போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!
-தஅ-

Thursday 14 April 2016

தமிழ்மொழியை அவமானப் படுத்தாதீர்கள்!

இன்று தமிழர்கள் சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள் அவர்களின் சிந்தனைக்கு:

இந்துமத கதைப்படி தமிழர் ஆண்­டு­களை 60 ஆகப்­ பி­ரித்து ஒவ்­வொரு ஆண்­டுக்கும் ஒவ்­வொரு பெயரிட்டு அழைத்­தார்கள்.

முதல்­ வ­ரு­ட­மான பிர­பவ வரு­டத்தில் தொடங்கி 60 ஆவது வரு­ட­மான அட்­ச­ய­வ­ரு­டத்தில் நிறை­வ­டை­கி­றது. இன்­று­ பி­றக்கும் 30ஆவது வரு­டத்தின் பெயர் துர்­முகி என்­ப­தாகும். இந்த 60 ஆண்டுகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரதத்தின் பெயர்கள்.

தமிழ் வருடத்தின் பெயர்கள் எப்படி சமஸ்கிரதத்தின் பெயரில் அழைக்கலாம்? என்று சிந்தித்ததுண்டா?

இந்துமத அடிப்படையில் கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டு எப்படி இஸ்லாமியகிருஸ்துவ தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்?

இந்த 60 ஆண்டு கணக்குப்படி எப்படி தமிழர்களின் வரலாற்றை குறிப்பிட முடியும்? எப்படி உங்கள் வயதை கணக்கிட முடியும்? என்றாவது சிந்தித்ததுண்டா??

தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் தொடர்ஆண்டு கணக்காக இருந்தால், தமிழர்களின் வரலாறு உலகம் முழுவதும் தெரிவதற்கும், தமிழினம் உலகின் மூத்தகுடிமக்கள் வாழ்ந்த இனம் என்ற வரலாற்றுக்கு ஒரு ஆதாரமாக இருக்குமே! அதை பற்றி சிந்தித்ததுண்டா??

அதனை கருத்தில்கொண்டு மறைமலை அடிகளார் போன்ற தமிழறிஞர்கள் தை-1 தமிழ் புத்தாண்டாக தமிழர் திருநாளாக கொண்டாட சொல்லி  திருவள்ளுவர் ஆண்டு கணக்கை பின்பற்ற சொன்னார்கள். அவர்களின் கணக்குப்படி இப்போது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2047 (கி.பி 2016+31 : அதாவது கிருஸ்து பிறப்புக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்துள்ளார்)

அப்படி பின்பற்றும் போது தமிழ்ப் புத்தாண்டு எல்லா மதத்துக்கும் பொதுவாக இருக்கும் மேலும் எல்லா தமிழர்களும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவார்களே!

தமிழ்ப் புத்தாண்டு என்பது எல்லா தமிழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் அப்படியிருந்தால் அது தமிழ்ப் புத்தாண்டு இல்லையென்றால் அது ஒரு மதத்தின் பண்டிகை.

சிந்தியுங்கள்!

சமஸ்கிரத பெயர் கொண்ட ஆண்டுகளை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி தமிழ்மொழியை அவமானப் படுத்தாதீர்கள்.

60 ஆண்டுகள் தான் தமிழ் ஆண்டுகள் என்று கூறி தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வேலையை அறிவுக்கு பொருந்தாத வகையில் செய்யாதீர்கள்!

ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு என்றுகூறி மற்ற மதத்தை நம்பும் தமிழர்களை பிரிக்காதீர்கள்!

தமிழர்களின் பண்பாடு மனிதர்களை பிரித்து ஆளுவதல்ல! ஒன்றுபடுத்தி மதித்து ஆளுதல்! அதனால் தை-1யை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுங்கள்! திருவள்ளுவர் ஆண்டு கணக்கை பின்பற்றுங்கள்!

மத நம்பிக்கையின்படி சித்திரை-1 யை கொண்டாட வேண்டும் என்று நினைத்தால், சித்திரை திருநாள் என்று கொண்டாடுங்கள்!

ஆனால் சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி கொண்டாடி தமிழ்மொழியை அசிங்கப்படுத்தி அவமானப் படுத்தாதீர்கள்! 
                                                                                                                                                   -தஅ-

Friday 8 April 2016

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

மற்ற வய­­­தி­­­னரைக் காட்­­­டி­­­லும் இளை­­­யர்­­­களே கைபே­­­சியை கழி­­­வறை­­­யில் அதிகம் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர். அத்­­­து­­­டன், இரு­­­வ­­­ரில் ஒருவர்தான் கழி­­­வறையை பயன்­­­படுத்­­­தி­­­ய­­­ பின் கைகளைச் சுத்தம் செய்­­­கின்றார். ஆயினும் கைபே­சியைச் சுத்தம் செய்­வ­தில்லை எனும் திடுக்­­­ கி­­­டும் தக­­­வல்­­­களை வெளி­­­யிட்­­­டுள்­­­ளது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று. 305 பேரிடம் நடத்­­­திய ஆய்வில் 10ல் ஒன்பது சிங்கப்­­­பூ­­­ரர்­­­கள் கைபே­­­சி­­­களைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர் என்றும் அவர்­­­களில் 10ல் ஒருவர் தான் அதைச் சுத்தம் செய்­­­கிறார் என்றும் கண்­­­ட­­­றி­­­யப்­பட்­­­டுள்­­­ளது. இப்­­­போக்கு சிங்கப்­­­பூர் இந்­­­தி­­­யச் சமு­­­தா­­­யத்­­­தி­­­லும் பர­­­வ­­­லா­­­கக் காணப்­­­பட்­­­டா­­­லும் ஆய்வு முடி­­­வு­­­களைக் காட்­­­டி­­­லும் கைபே­­­சியைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­தும் இந்தியச் சமூகத்தினரின் எண்ணிக்கை சற்றுக் குறை­­­வா­­­கவே உள்ளது.
ஆறில் ஒரு கை­­பே­­­சி­­­யில் மலம் தொடர்பான கிருமி இருப்­­­ப­­­தா­­­க­வும் கழிவறைகளில் இருப்பதைப் போல 18 மடங்கு கிருமிகள் கைபேசிகளில் இருப்பதாகவும் வேறு சில ஆய்­வு­கள் உறு­திப் படுத்­தி­யுள்­ளன. கழி­­­வறை­­­யில் கைபேசியைப் பயன்­­­படுத்­­­து­­­வ­­­தாக ஒப்­­­புக் ­­­கொண்ட நவின், 15, அதை அடிக்­­­ கடி சுத்தம் செய்ய சோம்­­­பே­­­ரித்­­­த­­­னப்­படு­­­வ­­­தா­கக் குறிப்­­­பிட்­­­டார். முக்­­­கி­­­ய­­­மான அழைப்புகளை உட­­­ன­­­டி­­­யாக ஏற்­­­ப­­­து தவிர பாடல் ­­­கள் கேட்­­­ப­­­து குறுஞ்­­­செய்தி அனுப்­­­பு­­­வது போன்றவற்றுக்கும் கழி­­­வறை­­­யில் கை­­­பே­­­சியைப் பயன்­­­படுத்­­­து­­­வ­­­தாகச் சிலர் கூறினர்.
கைபேசிகளைச் சுத்தப்படுத்தக் கோரும் பதாகையைச் சுமந்தபடி சாதிக்கினும் குறிப்பேடுகளை வழங்கியபடி ஆயிஷாவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
நன்றி: தமிழ் முரசு சிங்கப்பூர் 06/04/16

Tuesday 5 April 2016

“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு! சாஸ்திர விரோதம்!




மனுஸ்மிருதி ஆதாரம் இதோ!
பொய்யை மெய்யாய் காட்டுவதும்; இல்லாததை இருப்பதாய்க் காட்டுவதும்; பிறருடையதைத் தன்னுடையது என்பதும்; பலதை ஒன்று என்பதும் ஒன்றை பலதாக்குவதும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியாகும். இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. இந்தியாவிலிருந்த பல கடவுள் நம்பிக்கைகளை ஒன்றாக்கி அதுதான் இந்துமதம் என்று பித்தலாட்டம் செய்து பிழைப்பபதோடு, அதை வைத்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரி யாரே, இதை ஒத்துக்கொண்டு கீழ்க் கண்டவாறு கூறுகிறார்: “இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.” தெய்வத்தின் குரல், பாகம்-1, பக்கம் 125
கற்பனைகளையெல்லாம் புராணங்களாக்கி, அவை நடந்தவை என்று மக்களை நம்பச் செய்து முட்டாளாக்கி, பொழுதையும், பொரு ளையும் பாழாக்கச் செய்தனர். பிறருடைய கலை, மருத்துவம், மொழி, நாடு, பொருள் இவற்றைத் தன்னுடையது என்றனர். பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள், மண்ணின் மக்களை இழிமக்கள் என்று தாழ்த்தி தாங்களே உயர்ந்தவர்கள், தங்களுக்கு அடிபணிந்தே மற்றவர்கள் வாழவேண்டும் என்றனர்.
அதேபோல் பல நாடுகளாக இருந்த இந்தியப் பகுதியை ஒன்று என்றனர். ஒன்றாக இருந்த திராவிடர்களைப் பல வருணங்களாகப் பல ஜாதிகளாகப் பிரித்தனர். இந்தியா என்று ஒரு நாடே இல்லை. இப்பகுதி பல குறு, சிறு, பெரு நாடுகளாய் இருந்தது. 54 தேசங்களாய் இருந்ததாய் பல்வேறு கதைகளில் சொல்லப்படுகின்றன. அரிச்சந்திரன் மயானத் தில் நின்று கலங்கியபோதுகூட இந்த 54 தேசங்களையும் வரிசையாய் சொல்வதை அரிச்சந்திரன் நாடகத்தில் கேட்கலாம்.
ஆரிய பார்ப்பனர்களின் உயிர்நாடியாய் விளங்கும் மனுதர்ம சாஸ்திரமே இந்தியா இல்லை என்கிறது. இது பல நாடுகளாய் (தேசங்களாய்) இருந்தது என்கிறது. பாரதம் என்பது பல தேசங்களுள் ஒன்று என்கிறது. இந்திய தேசங்களுள் ஒன்றான பாரதம் என்ற பகுதியை இந்தியா முழுமைக்கும், அதையும் தாண்டி பாகிஸ்தானையும் சேர்த்து பாரதம் என்பது அடாவடிச் செயல், அயோக்கியச் செயல் அல்லவா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் அண்மை யில் பாரதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானைப் பிரித்தனர் என்கிறார். பகவத்தும், ஆர்.எஸ்.எஸ்.ம், அவர்களின் பரிவாரங்களான பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏற்றிப் போற்றும், நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? கீழே படியுங்கள், “பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம். இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்.
(மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம்-44)
மனுஸ்மிருதியின்படி பாரதம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. திராவிடம் போல, யவநம் போல, சகம் போல, தரதம் போல அது ஒரு தேசம். அப்படியிருக்க பல தேசங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு நாட்டைப் பாரதம் என்பதும், அதை அகண்ட பாரதம் ஆக் குவோம் என்பதும், மனுஸ்மிருதிக்கும், உண்மைக்கும் எதிரானதல்லவா? சாஸ் திரத்திற்கு புறம்பான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கு எதிரான உண்மைக்கு மாறான ஒரு கொள்கையை அடையத் துடிப்பது அநியாயம் அல்லவா?
இதில், “பாரத மாதா’’ என்பதும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பதும், அதைச் சொல்லாதவர்கள் தேச விரோதிகள் என்பதும் இந்திய அரசியல் அமைப்பிற்கும், மனுஸ்மிருதிக்கும் எதிரானதல்லவா? எனவே, “பாரதம்’’ என்பவர்களும், “பாரத மாதா’’ என்பவர்களும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பவர்களுமே தேசத் துரோகிகள் என்றாகிறது! மனுஸ்மிருதிபடி இதுதானே சரி! ஆக, பாரதம், அகண்ட பாரதம், பாரத மாதாஹி ஜே! என்பதெல்லாம் தேச விரோம், சாஸ்திர விரோதம் என்பது உறுதியாகிறது!
-மஞ்சை வசந்தன்