Saturday 6 February 2016

திருவள்ளுவர் ஆண்டு வரலாறு - தை-1 தமிழ்ப் புத்தாண்டு

தமிழருக்குத் தமிழில் தொடர் ஆண்டு இல்லாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள். சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்று 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழர்கள் தம் வாழ்வில் வழக்கில் பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.
இங்ஙனம்
தமிழ் வளர்சசிப்
பண்பாட்டுத் துறை
தமிழ்நாடு அரசு
ஆதாரம்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.-இன் ‘வள்ளுவரும் குறளும்’ (பக்.13) 1953
02 தை 2030
16-01-1999
சென்னை
நன்றி: விடுதலை 
http://www.viduthalai.in/page7/115094.html

No comments:

Post a Comment