Wednesday 23 March 2016

லீ குவான் இயூ அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்!

தமிழ் மொழியையும், தமிழர்களையும் சிறப்பாக வாழவைக்கும் ஒரு நாடு என்றால் அது சிங்கப்பூர்!

தமிழர்களுக்கு உரிய மரியாதையும், ஆட்சி அதிகாரத்தில் சமத்துவமான அங்கிகாரம் கொடுக்கும்  நாடு.

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கி தமிழை வாழவைக்கும் நாடு.
தமிழர்களை தமிழ் கற்க ஊக்குவிக்கும் நாடு.

தமிழை வளர்க்க நிதி அளித்து அதனை சரிவர செயல்படுத்திடும் ஒரு நாடு.

இவை அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ அவர்கள். அவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (23/03/2016).

திரு லீ குவான் இயூ அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்! அவர் விட்டு சென்ற மனித சமத்துவத்தை போற்றுவோம்! அதுவே நாம் அவருக்கு செலுத்தும் நன்றி.
-தஅ-

No comments:

Post a Comment